பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு!

கம்பஹா தங்கொவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்தில் பயணித்த பெண் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 29 வயதுடைய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.